ஸ்ரீநகர், பிப். 26- ஜம்மு-காஷ்மீரில் 2024 மக்கள வைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட் டில் “இந்தியா” கூட்டணி கட்சி களிடையே உடன்பாடு ஏற்பட்டுள் ளது. இது விரைவில் அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது.
மோடியின் பாஜக அரசை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள “இந்தியா” கூட்டணியில் தற்போது தொகுதிப் பங்கீடு தீவிரமாக நடை பெற்று வருகிறது. ஏற்கெனவே உத்த ரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தில்லி, ஹரியானா, குஜராத், கோவா, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரி லும் “இந்தியா” கூட்டணி கட்சிகளி டையே தொகுதி உடன்பாடு எட்டப் பட்டுள்ளது. ஞாயிறன்று பூஞ்ச் பகுதி யில் நடைபெற்ற “இந்தியா” கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரில் லடாக் - லே உட்பட மொத்தமுள்ள 6 தொகுதிகளில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டி யிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொகுதி விபரங்கள் அடுத்த இரண்டு நாட்களில் வெளியாகும் என ஜம்மு-காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் விகார் ரசூல் வானி தகவல் தெரிவித்துள் ளார். இதன்மூலம் “இந்தியா” கூட்ட ணியில் தொகுதி உடன்பாடு இறுதி யாகியுள்ள 7ஆவது மாநிலமாக ஜம்மு- காஷ்மீர் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்எல்டியின் பீகார் மாநிலப் பிரிவும் பேச்சுவார்த்தை?
“இந்தியா” கூட்டணியில் அங்கம் வகித்த ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளத்தை (ஆர்எல்டி) முன்னாள் பிரதமர் சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிப்பை வெளியிட்டு, தங்கள் பக்கம் வளைத்தது பாஜக. இந்த சம்பவத்திற்கு பிறகு ஆர்எல்டி இரண்டாக உடைந்ததாக தகவல் வெளியானது. அந்த தகவல் ஞாயி றன்று காங்கிரஸ் யாத்திரையில் உறுதி யானது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகாருக்கு வருகை தந்த ராகுல் காந்தியின் யாத்திரையில், ஆர்எல்டி கட்சியின் பொதுச் செயலாளர் சுனில் சிங் தலைமையில், ஆர்எல்டியின் முக்கிய தலைவர்கள், ஆயிரக்கணக் கான தொண்டர்கள் கலந்துகொண்ட னர். ஆர்எல்டியின் ஜெயந்த் சவுத்ரி மட்டுமே பாஜகவுடன் உள்ளார்.
இந்நிலையில், ஆர்எல்டியின் சுனில் சிங் தலைமையிலான அணி “இந்தியா” கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும், இதற்காக காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. சமாஜ்வாதி கட்சி தன் வச மிருக்கும் 63 தொகுதிகளில் சுனில் சிங் தலைமையிலான ஆர்எல்டிக்கு 3 தொகுதி வரை அளிக்க உள்ளதாக வும் தகவல் வெளியாகியுள்ளது.